Friday, February 5, 2010

எண்ணங்கள்

பாதங்கள் தரை கண்ட நாள் முதல்;
மெய் மண் சேரும் நாள் வரை
சிலிர்த்து சிரித்துவிட்டும்;
அழுது கரைந்துவிட்டும்
நமை நீங்கிப்போன நிமிடங்களை தேடுகிறோம் - மக்கிப்போய் தேங்கிவிட்ட எண்ணங்களில்....
அலைபாயும் என் எண்ண ஆழியை
கைகளில் தேக்கி வார்த்தைகளாய் வார்த்திடும்
என் கன்னி முயற்சி பகீரதத்தனமாய் இங்கே....

புடம் போட்டதாய் சில எண்ணங்கள் கால சுழற்சியில்;
புறம் சொன்னதாய் பல வலிகள் மீளா ரணங்களில்...

புரையோடிய காயங்கள் காற்றோடு உறவாடி சுவடின்றி கரைவதால்;
என் எண்ண்ங்களில் உரைந்து விட்ட குறைகளை களைய உங்களிடம் வருகிறேன் - பதிவுகளுடன்.